ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள்: இலங்கைக்கு மீள அழைத்து வர கோரி போராட்டம்

0
151

ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று தம்மை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தொழில் நிமித்தம் ஜோர்தானுக்கு சென்ற 250 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள்கூட ஒன்றி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல வருடங்களாக ஜோர்தானில் தங்கியுள்ள நிலையில் பலரது விசா காலம் முடிவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன்படி பலருக்கு ஜோர்தானில் தங்குவதற்கு வீசாகூட இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அசில் யுனிவர்சல் (Asil Universal) எனும் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு அதிகாரிகள் உரிய சம்பளத்தை வழங்குவதில்லை எனவும் இலங்கைக்கு மீள வருவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தமக்கு உரிய சம்பளத்தை வழங்கவும் நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கவும் இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.