மர்மமாக உயிரிழந்து கிடந்த 4 வயது சிறுமி !

0
234

சீதுவ, ரத்தொலுகம பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து 4 வயது சிறுமி உட்பட இரண்டு சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி நேற்று மாலை (26-06-2023) நான்கு வயது சிறுமி மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆண் சிறுமியின் மாமா என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.