மாத்தறையில் கொடூரம் : 3 பெண்கள் மீது சரமாரியாக கத்தி குத்து : பெண் ஒருவர் பலி : தாக்குதல் மேற்கொண்டவரும் தற்கொலை

0
782
matara urubokka knife attack

மாத்தறை ஊருபொக்க – கல்பொக்க பிரதேசத்தில் நேற்றிரவு நபரொருவர் இரண்டு வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதல்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.(matara urubokka knife attack)

இதேவேளை கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 40 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பெரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள 32 மற்றும் 64 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தீவிரமடைந்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:matara urubokka knife attack,matara urubokka knife attack,matara urubokka knife attack,