ஜனாதிபதி சொல்வதை எதை நம்புவது

0
81

13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி சொல்லிக்கொண்டு தான் வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தங்களின் கைகளுக்கு எடுத்து இருப்பதால் அவற்றை திரும்பி தர வேண்டும் என்ற முறையில் ஒரு குழுவொன்றை அமைத்தார்.

செப்டம்பர் மாதம் அந்த அதிகாரம் வழங்கப்படும் என கூறினார் இன்று வரை வழங்கப்படவில்லை. இதை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தாத போது அவர் சொல்வதை எதை நம்புவது என தெரிவித்தார்.