செல்லப் பிராணிகளை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

0
65

தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணத்தினால் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் என கால்நடை வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல்இ கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல்இ குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல் இ பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.