மட்டக்களப்பு – தன்னாமுனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் படுகாயம்

0
124

புதிய இணைப்பு
மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.மேலும் விபத்தில் குழந்தை, பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக சிகிச்சை

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.