ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ; சந்தேகநபர் அதிரடி கைது..

0
112

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9, 2022 அன்று, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 46 வயதுடைய சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் அவர் வீட்டில் ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பது தெரியவந்தது.

சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.