‘சகோதரியின் பாடலும் கண்டிப்பாக இடம்பெறும்’ பவதாரிணி குறித்து கொழும்பில் உருக்கமாக பேசிய யுவன்!

0
151

இலங்கையில் இடம்பெற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் சகோதரி பவதாரிணியின் பாடலும் கண்டிப்பாக இடம்பெறும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

எனது இசை வரலாற்றில் மிக முக்கியமான பங்கு எனது சகோதரி..சின்ன வயதிலே கையை பிடித்து பியானோவில் வைத்தது எனது சகோதரி என யுவன்சங்கர் ராஜா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உருக்கமாக பேசியுள்ளார்.

இதேவேளை, யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கலந்துககொாள்ளும் ஊடக சந்திப்பானது கொழும்பு தாமரை கோபுர 26 வது மாடி அரங்கத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பு Aaraa Entertainment வழங்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பிலேயே இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொள்வதற்காக யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்தனர்.

கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா! | Yuvan Shankar Raja Spoke Bhavadharani Colombo

இந்த நிலையில் யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் இன்று மாலை கொழும்பு தாமரைக் கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள யுவன் லோங் டிரைவ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான ஹரிச்சரன், ஆட்ன்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம் விஷால், குக்சார், சௌந்தர்யா, கௌதம், எம்.சி.சனா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.