இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று கூடவுள்ளது. இதன்போது இலங்கை மின்சார (CEB) சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான முடிவை எட்டியதும் CEB முன்மொழிவு மற்றும் PUCSL இன் முடிவு மூன்று வார காலத்திற்கு பகிரங்கப்படுத்தப்படும். அதற்கு அமைவாக மின் கட்டணத்தில் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.