கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இத்தாலியின் அதி சொகுசு கப்பல்!

0
166

இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட அதி சொகுசு கப்பலான ‘AIDAbella’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் 1,900 சுற்றுலாப் பயணிகளையும் 730 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. நவம்பர் முதலாம் திகதி ஓமன் நாட்டில் உள்ள கசாப் துறைமுகத்தில் இருந்து கப்பல் இலங்கையை நோக்கி புறப்பட ஆரம்பித்து கொழும்பை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் 12 அடுக்குகளில் 1,025 விருந்தினர் அறைகளைக் கொண்டுள்ளது. இதில் 12 பார்கள் மற்றும் கிளப்புகள், 3 விருந்தினர் அரங்கங்கள், 8 நீர்த்தடாகங்கள் மற்றும் 7 உணவகங்கள் என பல விதமான அம்சங்களை கொண்டுள்ளது.

உணவங்கள் அனைத்தும் அனைத்து நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. Aitken Spence Shipping Ltd நிறுவனம் கப்பலின் உள்ளூர் முகவர் மற்றும் கப்பலின் பயணங்களை ஒருங்கிணைக்கிறது.