கனடாவில் களவாடச் சென்றவர் காற்சட்டையை இழந்து வீதியில் ஓட்டம்!

0
296

கனடாவில் களவாட சென்ற சந்தேக நபர் ஒருவர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பனவற்றை இழந்து வீதியில் ஓடிய வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆபரண கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Azalea Avenue மற்றும் Burkholder Drive ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆபரணங்கள் பலவந்தமாக அபகரிப்பு

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அணுகி அவர்களது ஆபரணங்களை பலவந்தமாக அபகரித்துள்ளார்.

இதன் போது குறித்த இருவரும் கொள்ளையருடன் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவத்தின் போது கொள்ளையர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பவற்றை இழந்து விட்டதாகவும் அவற்றை கருத்தில் கொள்ளாது தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காற்சட்டையும் பாதனிகளையும் இழந்த நிலையில் அவசரமாக ஓடி தனது வாகனத்தில் ஏறி குறித்த நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில்  ஆபரணங்களை இழந்த இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபருடைய புகைப்படம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை இந்த குற்றச்செயலுடன் தொடர்புபட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பற்றிய விபரங்கள் ஏதும் இருந்தால் அதனை போலீசாருடன் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.