நான்கு வருட இன்ஸ்டா காதல்; காதலியை விட்டு பிரிந்த காதலன்: நடுத்தெருவில் தீக்குளித்த இளம்பெண்

0
41

சென்னையைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மணிகண்டன் என்பவருடன் இன்ஸ்டாக்ராம் மூலம் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாகவே இருவரும் பழகி வர காலப்போக்கில் நட்பு தகாத உறவாக மாறியது. இருவரும் கணவன் – மனைவியைப் போல் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இந்நிலையில்தான் மணிகண்டனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இதன் காரணமாக தனது காதலியான நந்தினியுடன் பேசுவதை தவிர்த்துள்ளார் மணிகண்டன்.

தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த நந்தினி மனமுடைந்து மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நந்தினி தனது இருசக்கர வாகனத்தில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், நந்தினியின் உடலில் எரிந்த தீயை அணைத்துள்ளார். நந்தினி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். நந்தினியின் காதலனான மணிகண்டனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.