திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கூட்டிச்சென்ற இளைஞன்; முல்லைத்தீவில் சம்பவம்

0
171

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (12-08-2023) கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனையும் குறித்த சிறுமியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கூட்டிச்சென்ற இளைனுக்கு நேர்ந்த கதி! | Youth Arrested Girl Saying Marrying Her Mullaitivu

இதேவேளை, குறித்த இளைஞரை தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த மாதம் குறித்த இளைஞன் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.