அரசாங்கத்துடன் இணையும் எண்ணமில்லை! மைத்திரி திட்டவட்டம்

0
170

ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணையவுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அரசுடன் இணையவுள்ளீர்களா என டலஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை எனவும் போலியான தகவல்களே பரப்பட்டு வருகின்றன எனவும் மைத்திரி பதிலளித்துள்ளார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.