மயானத்தில் சடலத்தை புதைக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி; பொலிஸாருக்கு வியப்பு!

0
218

அக்கரைப்பற்றில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி(டி.வி) மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சடலமொன்றை புதைப்பதற்காக திங்கட்கிழமை (19) வந்திருந்தவர்கள் அங்கு பெட்டியொன்று புதைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தொலைக்காட்சி மீட்பு – தாலி மாயம் 

மயானத்தில் சடலத்தை புதைக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி; பொலிஸாருக்கு வியப்பு! | Bury The Corpse Cemetery Surprised By The Police

அதனையடுத்தே பெட்டி தோன்றி எடுக்கப்பட்டு அதிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொலைக்காட்சி அக்கரைப்பற்று 8 பிரிவின் பழைய ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை(18) கொள்ளையிடப்பட்டது என கண்டறியப்பட்டது.

வீட்டில் இருந்த ஜந்தரை பவுன் அளவான தாலி மற்றும் பெறுமதியான தொலைக்காட்சி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரின் தந்தை பொலிஸில் ஞாயிற்றுக்கிழமை (18) முறைப்பாடு செய்திருந்தார்.

மயானத்தில் சடலத்தை புதைக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி; பொலிஸாருக்கு வியப்பு! | Bury The Corpse Cemetery Surprised By The Police

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் களவுபோன டி.வி மயாத்தில் மீட்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மாயானத்தில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.