மனைவிகளை மாற்றி கணவர்கள் உல்லாசம்; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

0
214

இந்தியாவின் கேரளாவில் மனைவிகளை மாற்றி கணவர்கள் உல்லாசம் அனுபவித்த கணவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொலிசில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முகநூல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குழுவை ரகசியமாக தொடங்கி அந்த குழுவுக்கு ‘கப்பிள்ஸ் மீட்’ என்று பெயரிட்டுள்ளமை தெரியவந்தது.

இந்த குழுவில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கணவர், மனைவி இருவரும் தங்களது விருப்பத்துடனும் கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். சிலநேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும் உல்லாச விடுதிகளிலும் சந்தித்து மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பதும் உண்டு.

அதேசமயம் சில நேரங்களில் ஒரு பெண் பல ஆண்களின் ஆசைக்கும் ஒரு ஆண் பல பெண்களின் ஆசைக்கும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் கூறுகையில் மனைவிகளை உல்லாசத்திற்கு மாற்றிக்கொள்ளும் கும்பலுடன் தொடர்புடைய 14 சமூகவலைத்தள குழுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த குழுவில் கேரளா மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இதுபோன்ற ஒவ்வொரு சமூக ஊடகக் குழுவிலும் சராசரியாக 2,000 தம்பதிகள் செயலில் உள்ளதாக கூறியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் சாதாரண மன நிலையோடு இருப்பவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் நிலைக்கு வர மாட்டார்கள். ஆதலால் இந்த கும்பல் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறதா என்பது குறித்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய புள்ளியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு பெரிய கும்பல் இருப்பதும் அதில் சில அரசியல் புள்ளிகளும் இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த கும்பல் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள டெலிகிராம், மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. முதலில் டெலிகிராம் அல்லது மெசேஞ்சர் குழுக்களில் சேருவதும் பின்னர் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் அவ்வப்போது சந்திப்பதும் அதன் பிறகு மனைவிகளை பரிமாறிக் கொள்வதும் சில நேரங்களில் ஒரு பெண்ணை ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் பகிர்ந்து கொள்வதும் நிகழ்ந்து வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

அதேவேளை ஒருநாள் உறவுக்கு பணத்திற்கு பதிலாக சில ஆண்கள் தங்கள் மனைவிகளை வழங்குவதாகவும் அந்தக் குழுவில் சில நேரங்களில் இடம்பெற்றுள்ள தனி உறுப்பினர்கள் பணம் கொடுத்து விரும்பியவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய குற்றவாளி 20 ஆன்லைன் குழுக்களில் உறுப்பினராக உள்ளார். போலீசில் 7 பேர் சிக்கியதை தொடர்ந்து ஒவ்வொருவராக ஆன்லைன் குழுக்களில் இருந்து விலகி வருகின்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவர் பரபரப்பான மனைவி பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு காயம்குளத்தில் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்று பின்னர் அந்த கும்பலை பொலிசார் கைது செய்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.