இந்தியாவின் கேரளாவில் ஆண்கள் தமது மனைவிகளை வேறு நபர்களுடன் மாற்றி உறவு கொள்ளும் சம்பவம் குறித்த தகவல் கடந்த வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த தகவலை அம்பலப்படுத்திய பெண் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னனி
கேரளா, கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷினோ மேத்யூ. இவருக்கு பாலகாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பெண் கணவர் மீது புகாரளித்துள்ளார். அதில் கணவருக்கு சில பணக்கார நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஜோடி ஷேரிங், கப்பிள் மீட் அப் போன்ற சில குழுக்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி தங்கள் மனைவிகளை பரஸ்பரம் பகிரந்து உறவு கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, அவரது கணவர் தெரிந்த நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். செய்யவில்லையென்றால் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
பெண் படுகொலை
அதன் பேரில் பொலிஸார் கணவரை பிடித்து செல்போன்களை பரிசோதித்ததில் நூற்றுக்கணக்கனா நபர்கள் ஈடுபட்டது அம்பலமானது. இதனால் 6 பேரை கைது செய்துள்ளனர்.
அதற்குப்பின் பாதிக்கப்பட்ட பெண் கணவனை பிரிந்து தந்தை மற்றும் சகோதரர் துணையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் சகோதர் புகாரளித்து பெண்ணின் கணவர் தான் பழிவைத்து இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது கணவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார்.
பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்ததையடுத்து பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துடன் மேலதிக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: