யாழில் போராட்டத்தில் கைதானவர்களை சந்தித்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

0
249

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்துள்ளார்.

அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணையை கொண்டார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்கள் என பொலிஸாரால் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.