தலைவர் பதவியில் இருந்து மைத்திரியை நீக்க நடவடிக்கை

0
420

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் முன்னாள் பலம் வாய்ந்தவர் மற்றும் தற்போது ஆளும் கட்சியில் உள்ள பலம் வாய்ந்த ஒருவரின் அனுசரணையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதியை நீக்க நடவடிக்கை | Removal The Former President From Post Of Chairman

கட்சி அரசியலமைப்பில் உள்ள ஷரத்தின் அடிப்படையில் திரு.மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதே அவர்களின் திட்டம் என்று கூறுகின்றார்.

கட்சியில் இருந்து ஒருவர் தலைவரானால் அவரே கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக வருவார் என்று கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் திரு மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் சாதகமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தற்காலிக தலைவராக மஹிந்த அமரவீரவை நியமிப்பது அவர்களது திட்டம் என்று கூறப்படுகிறது. 

Mahinda Amaraweera