உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்: விடுக்கப்பட்ட அழைப்பு

0
48

நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி படுகொலையின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் (United Kingdom) நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வானது உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது.

உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் 28 – 30 ஆம் திகதி (வெள்ளி-ஞாயிறு) யூன் 2024 ஆகிய நாட்களில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு குறித்த நாட்களில் நினைவேந்தல் நிகழ்வானது காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்நிலையில், நிகழ்விற்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றது.