சிறுநீர் கழிக்க சவப்பெட்டியில் விழித்­தெ­ழுந்த இளைஞன்!

0
347

சிறுநீர் கழிப்­ப­தற்­காக விழித்­தெ­ழுந்த இளைஞர் ஒருவர் சவப்­பெட்­டி­யொன்­றுக்குள் தான் அடைக்­கப்­பட்­டுள்­ளதை அறிந்து அதிர்ச்­சி ­அடைந்த சம்­பவம் பொலீ­வியால் இடம்­பெற்­றுள்­ளது.

விக்டர் ஹியூகோ மிக்கா அல்­வாரெஸ் எனும் 30 வயது இளைஞர் மனிதபலி கொடுப்­ப­தற்­காக தான் உயி­ருடன் புதைக்­கப்­பட்­டதாக தெரி­வித்­துள்ளார்.

தென்அமெ­ரிக்க நாடான பொலீ­வி­யாவின் எல் அட்டோ நகரில் அண்­மையில் நடை­பெற்ற பூமி மாதா திரு­வி­ழாவை பார்­வை­யி­ட சென்­றி­ருந்த வேளையில் இந்­நி­லையை தான் எதிர்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

பொலி­வி­யாவில் வரு­டாந்தம் ஆகஸ்ட் மாதம் பூமி மாதா திரு­விழா நடை­பெறும். பூர்­வீக குடி­மக்கள் ‘பச்­ச­மமா’ எனும் பூமி மாதாவுக்கு பூஜைகள் செய்து இவ்­வி­ழாவை கொண்­டா­டுவர்.

தீமூட்டி மிருகக் கொழுப்பு, மூலிகைத் தாவ­ரங்கள், முட்­டைகள், இனிப்­புகள் என பல்­வேறு பொருட்­களைப் படைத்து பச்­ச­ம­மாவை மக்கள் வழி­ப­டுவர்.

எல்அட்டோ நகரில் திரு­விழா பார்க்கச் சென்ற விக்டர் ஹியூகோ இரவில் மது அருந்தி நட­ன­மாடிக் கொண்­டி­ருந்த பின் உணர்­வி­ழந்த உறங்­க­விட்ட பின் சவப்­பெட்­டி­யொன்­றுக்குள் அவர் விழித்­தெ­ழுந்­தாராம்.

சிறுநீர் கழிப்­ப­தற்­காக சவப்­பெட்­டியில் விழித்­தெ­ழுந்த இளைஞர் ! | A Young Man Wakes Up To Urinate In A Coffin

இது தொடர்­பாக விக்டர் ஹியூகோ மிக்கா அல்­வாரெஸ் கூறு­கையில்,

விழா ஆரம்­ப­மா­கு­வற்கு முன் இரவில் நாம் நட­ன­மாட சென்­றி­ருந்தோம். அதன் பின் நடந்­தவை எனக்கு நினை­வில்லை.

எனக்கு நினைவில் உள்ள விடயம் என்­னவென்றால் நான் படுக்­கையில் இருப்­ப­தாக எண்­ணி­ய­துடன் சிறுநீர் கழப்­ப­தற்­காக எழ முயன்றேன். ஆனால் என்னால் நகர முடி­ம­ய­வில்லை.

கண்­ணாடி பெட்­டிக்குள் நான் அடைக்­கப்­பட்­டி­ருப்­பதை உணர்ந்தேன். கண்­ணா­டிக்கு மேல் மண் சேறு மூடி­யி­ருந்­தன.

என்னால் கண்­ணா­டியை உடைக்க முடிந்­தது. கண்­ணா­டியை உடைத்­த­வுடன் மண் உள்ளே வர ஆரம்­பித்­தது. கண்­ணா­டியை தள்ளி நான் வெளியே வந்தேன்.

அதன் பின் நான் பொலிஸ் நிலையம் சென்று எனக்கு நடந்­ததை தெரி­வித்தேன். ஆனால் நான் கூறு­வதை அவர்கள் நம்ப மறுத்­தனர். நான் அப்­போதும் மது­போ­தையில் இருப்­ப­தாக அவர்கள் எண்­ணினர். வீட்டுக்குப் போய் நிதானமாக வரச் சொன்னார்கள் என்றார்.

தான் மது அருந்­திக்­ கொண்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து 50 மைல் தொலை­வி­லுள்ள அச்­சாச்சி எனும் இடத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கு புதைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பச்­ச­ம­மா­வுக்கு மனிதப் பலி கொடுப்­ப­தற்­காக தான் புதைக்­கப்­பட்­டதில் சந்­தே­க­மில்லை எனவும் விக்டர் ஹியூகோ மிக்கா அல் வரெஸ் கூறியுள்ளார்.