உக்ரைனுக்கு ஆதரவு; தூதரக அதிகாரிகளுக்கு கடும் உத்தரவிட்ட ரஷ்யா!

0
507

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டியதாக பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷ்யா அறிவித்துள்ளதுடன், ஆஸ்திரியா தூதரக அதிகாரிகளையும் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 2 வாரத்திற்குள் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளின் தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யா அதிகாரிகள் 38 பேரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து வெளியேற்றியதற்கு பழிக்குப் பழி வாங்கும் நிகழ்வாக ரஷ்யா இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதர்லாந்தின் 15 அதிகாரிகள், ஆஸ்திரியாவை சேர்ந்த 4 அதிகாரிகள் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.