கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் உடல் கருகி பலி

0
483

தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதன்போது எதிரே வந்த காரும் மினி பஸ்சும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து மளமளவென பஸ் முழுவதும் வேகமாக பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயைஅணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் பஸ்சில் இருந்த குழந்தைகள் உள்பட 20 பேர் கருகி உயிரிழந்த நிலையில், சாரதி உள்பட சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.