பிரித்தானியாவில் அதிகாலை நடந்த துயர சம்பவம்! மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்

0
473

பிரித்தானியாவில் அதிகாலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சுமார் 30 வயதிற்குட்பட்ட நபர் மருத்துவமனையில் உயிர் பிழைக்க போராடி வருகிறார்.

பிரித்தானியாவின் West Midlands-ன் Dudley-ல் இருக்கும் Queens Cross பகுதியிலே அதிகாலை 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 30 வயதிற்குள் இருக்கும் அந்த நபர் அடையாளம் தெரியாத நபர்களால சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அப்பகுதியில் இருக்கும், ஜிம் மசூதி போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜிம்மிற்கு அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களில் முதல் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்த அந்த நபர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து West Midlands பொலிசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 30 வயதிற்குட்பட்ட நபர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது குறித்து தகவல்கள் யாரேனும் அறிந்திருந்தால், அவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் புகைப்படம் தொடர்பான விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் தெரிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.