பதுளை- பசறை தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று

0
587

பதுளை- பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளிலும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

ஹம்பலந்தோட்டை- மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 34 பேர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.