விமானச் சேவையை தொடங்க சம்மதம்

0
341

கொரோனா தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் சிறிலங்காவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாடு திறக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 6 மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.