கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் மூவாயிரம் பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். Opened mining train station after 17 years US
இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது அதன் அருகே இருந்த சுரங்க ரெயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது. பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இதனால் அந்த ரெயில் நிலையம் மூடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ரெயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த ரெயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
அங்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. அதை மக்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ரெயில் ஓடுவதை போனில் படம்பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.
tags :- Opened mining train station after 17 years US
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- நடிகை ஸ்ரீதேவியை கெளரவிக்கும் சுவிட்சர்லாந்து
- துபாய் – அமெரிக்கா விமானத்தில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு
- ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!!
- பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை: அதிர்ச்சி தகவல்!
- உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனை படைத்த ஜப்பான் ஜோடி
எமது ஏனைய தளங்கள்