காவல்துறைக்கு சவால் விட்ட ரவுடி நாகராஜ் – புறமண்டையில் அடித்ததால் நேர்ந்த விபரீதம்

0
598
rowdy nagaraj challenged police - disaster caused pitting pyramid
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது.rowdy nagaraj challenged police – disaster caused pitting pyramid
இவரது அண்ணன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறைக்குள் பெண் மருத்துவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புல்லட் நாகராஜனின் அண்ணனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.பி. ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜ் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறைக்குள் இருந்து வெளியில் வந்தால் வீடு திரும்ப முடியாது என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டியுள்ளார். அந்த ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
தனது அண்ணனைப் போல் தான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும்,  இந்த சம்பவத்திற்கு நீதிப்படியும், வேறுவிதமாகவும் கட்டாயம் தண்டிப்பேன் என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டினார்.
எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா-வுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் ஆடியோவை வெளியிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து,  இதுதொடர்பாக மதுரை மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், புல்லட் நாகராஜ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில், கொலை மிரட்டல், பொது இடத்தில் அருவருப்பான வார்த்தைகளால் பேசி மிரட்டுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் அச்சுறுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்  பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த புல்லட் நாகராஜனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :