கட்டுநாயக்க விமானநிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டு கடிதங்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

0
341
special project deliver foreign letter package Tamil news

தேங்கி கிடக்கும் கடிதங்களை ஒருநாளைக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. special project deliver foreign letter package Tamil news

அஞ்சல் சேவையாளர்கள் பல நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் தபால் சேவை முடங்கியது.

இதனால் சேமிப்பில் கிடக்கும் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை எதிர்வரும் ஒரிரு தினங்களுக்குள் விநியோகிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டுநாயக்க விமானநிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்க நாளை விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 16 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்றுடன் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
special project deliver foreign letter package Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites