Val-d’Oise இல் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 7 நபர்கள், நீதிபதி பற்றாக்குறை காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Drug group released withoutt sentence
Pontoise குற்றவியல் நீதிமன்றத்தில் 7 நபர்கள் விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டனர். குறித்த 7 நபர்கள் நெதர்லாந்தில் இருந்து கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப்பொருட்களை கடத்திவந்ததாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை மேற்கொள்ள நீதிபதிகள் பற்றாக்குறையாக இருந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் நீதி மன்றத்தில் ஓப்படைக்கவேண்டும் என சட்டம் இருக்கிறது.
ஆனால் குறித்த நபர்களை தொடர்ந்து காவல்நிலையத்திலும் வைத்திருக்க முடியாது என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- பாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!