3.5 கோடி ரூபாய் பெறுமதியான தங்கங்களுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பிரிவு உயர் அதிகாரி கைது

0
392
six point five cross gold immigration emigration officer arrest

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (six point five cross gold immigration emigration officer arrest)

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கிலோ தங்க கட்டிகளுடனேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்கப் பாளங்களின் பெறுமதி 3.5 கோடி ருபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தங்கப் பாளங்களை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தங்கப் பாளங்கள் வெளிநாட்டவரினூடாக அவருக்கு கிடைத்திருக்கலாம் என விசாரணைகளின்; மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- six point five cross gold immigration emigration officer arrest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites