வடக்கு கிழக்கில் 522 ஏக்கர் காணி விடுவிக்க இராணுவம் தீர்மானம்

0
510
Military resolution release 522 acres land North East

(Military resolution release 522 acres land North East)
தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் 522 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளது.

தனியார் காணிகளில் இருந்து வெளியேறும் இராணுவத்தை, மற்றுமொரு இடத்திற்கு மாற்றுவதற்காக 866 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதனும் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைவாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, முகாம்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்துவரும் காணி உரிமையாளர்களை மீண்டும் அந்த இடங்களில் குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான நான்காயிரத்து தொள்ளாயிரத்து 92 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 522 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Military resolution release 522 acres land North East