மனித உடற் தோற்றத்தில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி!

0
45

மனித உடலை ஒத்த தோற்றத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம் தெனியாய – விஹாரஹேன செல்வகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை குறித்த ஆட்டுக்குடி பிறந்துள்ளது. ஆனாலும் பிறந்து அரை மணிநேரத்தில் துரதிஷ்ட வசமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செல்வகந்தையில் வசிக்கும் வசந்தகுமார் என்பவருக்கு சொந்தமான ஆட்டு மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள் குறித்த குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தின் போது அவர் வீட்டில் இல்லை எனவும் வேலை நிமித்தம் கொழும்பு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.