யாழ் கொக்குவில் தொடருந்து நிலையத்திற்கு சீல் வைப்பு: இருபது லட்சம் ரூபாய் மோசடி

0
41

யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறித்த தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் இன்று மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்தே கொக்குவில் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என தொடருந்து பணிமனையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச் சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு செல்லவும் என்ற அறிவிப்பொன்றும் கொக்குவில் தொடருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.