ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான், இலங்கைக்கு விஜயம்

0
40

பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஈரான் ஜனாதிபதி திங்கட்கிழமை (22) இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இப்ராஹிம் ரைசி இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்து, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்ட ரைசி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின்  திறப்பு விழாவில் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து பங்கேற்பதே அவரது இலங்கை விஜயத்தின் சிறப்பம்சமாகும்.