கனடாவில் இடம்பெற்றுள்ள பாரிய கொள்ளை

0
31

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொள்ளையிடப்பட்ட மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.