மனைவியை கொலை செய்து இன்சூரன்ஸ் பணத்தில் செக்ஸ் பொம்மை வாங்கிய கணவன்!

0
52

அமெரிக்காவில் 30 வயதான நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து அவருக்கு கிடைத்த இன்சுரன்சு பணத்தை வைத்து செக்ஸ் பொம்மையை வாங்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 30 வயதான கோல்பி ட்ரிக்கிள் 26 வயதான மனைவி கிறிஸ்டன் டிரிக்கிள்  ஹோஸ்ட் கன்சாவில் உள்ள வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். பொலிஸாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர். 

மனைவி பெயரில் 2 ஆயுள் காப்பீடுகள் இருந்தது. அதன் மூலம் கோல்பிக்கு 1.20 லட்சம் டொலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி) இன்சூரன்சு தொகை கிடைத்தது. அதனை அவர் ஜாலியாக செலவழித்துள்ளார்.

வீடியோ கேம்களுக்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் செலவழித்தார். கடன்களை அடைத்தார். தான் பெரிய இசை கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் இசைக்கருவி–கள் வாங்கி குவித்தார். இதுமட்டுமின்றி ரூ1.66 லட்சம் மதிப்பிலான செக்ஸ் பொம்மை வாங்கினார். 

இது தொடர்பாக அவரது தாயார் கூறும் போது,

தனது மகன், மனைவி இறந்த பிறகு சரியாக தூங்குவது இல்லை. இதனால் செக்ஸ் பொம்மையினை வாங்கினார். ஆனால் அதனுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

மனைவியை கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடி இன்சூரன்சு மூலம் கிடைத்த பணத்தில் செக்ஸ் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் பொலிஸார் கோல்பி டிரிக்கிளை கைது செய்தனர்.