நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை; ஜீவன் தொண்டமான் கருத்து

0
92

இவ்வருடம் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட குடிநீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

குடிநீர் கட்டண சூத்திரத்தில் உள்ள சிக்கல்களை நாங்கள் மேலும் ஆராய்ந்து வருகிறோம்.

மக்கள் மீது மேலும் தேவையற்ற சுமையை சுமத்தவோ அல்லது அதனை நடைமுறைப்படுத்தவோ தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் அன்றாட துன்பங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கான ஏனைய சலுகைகள் தொடர்பில் கவனம் செலுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.