இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தடகள வீராங்கனையான தங்கை கலைச்செல்வி கேலோ இந்தியா போட்டிகள் உட்பட இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரின் திறமையை பாராட்டும் விதமாகவும், அவருக்கு நவீன சக்கர நாற்காலி வாங்குவதற்காகவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில், ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலையை தி.மு.க கட்சியின் இளைஞர் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் வெற்றிகளை குவிக்க தங்கையை வாழ்த்தி மேலும் உற்சாகமளிப்பதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகத் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.