பொலிஸாரின் ‘யுக்திய நடவடிக்கை’; 24 மணிநேரத்தில் 785 பேர் கைது

0
230

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 189 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 128 கிராம் ஹெராயின், 115 கிராம் பனி, கஞ்சா 08 கிலோ 626 கிராம், 138,676 கஞ்சா செடிகள், மாவா 57 கிராம் 200 மி.கி, 34 மாத்திரைகள், மதன மோதக 125 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேக நபர்களில் 7 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை ; 785 பேர் 24 மணிநேரத்தில் கைது | 785 Suspects Arrested In Last 24 Hours

மேலும், கைது செய்யப்பட்ட 189 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில், 29 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 155 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

குற்றச் செயல்களுக்காகத் தேடப்படும் 05 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.