உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை; தவியாய் தவிக்கும் வாலிபர்

0
124

கொலம்பியாவில் 29 வயது இளைஞர் ஒருவர் தனது 5 அடி உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்த நிலையில் தற்போது அவர் படாதபாடு பட்டு வருவதாக குமுறி உள்ளார்.

1.46 கோடி ரூபாய் செலவிட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உயரம் 2 அங்குலம் அதிகரித்துள்ளதாக கூறியுள அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், சரியாக தூங்க கூட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மோசமான பின்விளைவுகள்

கொலம்பியாவில் வசிக்கும் ஜெபர்சன் கோசியோ. ஜெபர்சன் முதலில் 5 அடி 8 அங்குலம்தான் இருந்தாராம். நான்கு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை 6 அடியாக உயர்த்தியதாக அவர் கூறியுள்ளார்.

உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை; தவியாய் தவிக்கும் வாலிபர் | Height Augmentation Surgery Desperate Teenager

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் அறுவை சிகிச்சைக்காக சுமார் 1.46 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறிய அவர் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு வலி அதிகரித்துள்ளதாம்.

இரவு மாத்திரை சாப்பிட்டாலும் தூக்கம் வரவில்லை. தற்போது வலியை நிறுத்துவதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய போகிறாராம். அதுபோல் அவருக்கு தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

அதற்கான அறுவை சிகிச்சை வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் எப்போதும் அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாதீர்கள். அழகுக்காக செய்யும் காரியம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.