என்னை ஏமாற்றி சிக்க வைத்ததாக கூறும் இலங்கை நடிகை: சுகேஷ் வழக்கில் தொடர்பில்லை என தெரிவித்த ஜாக்குலின்

0
107

இந்திய தலைநகர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மோசடி செய்து ரூ.200 கோடியைப் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். சுகேஷ் தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியைச் சிறையில் இருந்து கொண்டே பிரபல நடிகைகளுக்காகச் செலவு செய்தார்.

அதில் இலங்கையை சேர்ந்தவரும் பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதிக அளவில் பயனடைந்ததாக கூறப்பட்டது. சுகேஷிடம் பரிசு, பணம் பெற்ற நடிகைகளை அழைத்து விசாரித்தனர்.

Oruvan

சுகேஷிடம் பரிசு, பணம் வாங்கிய மற்ற நடிகைகள் அனைவரும் இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஜாக்குலின் மட்டும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள புதிய மனுவில், ”என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவையாகும்.

சுகேஷ் என்னை ஏமாற்றி சிக்க வைத்துவிட்டார். எனவே அமலாக்கப் பிரிவு என் மீது பதிவுசெய்திருக்கும் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.