போதகர் ஜெரோம் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க கோரி நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனை..

0
131

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.

அதன்படி, உரிய பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மனு தாக்கல் 

தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.

பல மதங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய,போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவு

அவர் நவம்பர் 29 அன்று நாட்டுக்கு திரும்பிய நிலையில் இரண்டு நாட்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னரே கைது செய்யப்பட்டார்.

சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Petition Filed By Pastor Jerome Fernando

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் ஜெரோம் வந்த 48 மணி நேரத்திற்குள் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.