உக்ரைனில் இலங்கை கேப்டனுக்கு இராணுவத்தினரின் மரியாதையுடன் அஞ்சலி

0
116

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் உக்ரைன் இராணுவத்தினரின் மரியாதை மற்றும் உக்ரைன் மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் உக்ரைனின் மிலிதோன் நகரில் நடைபெற்றது.

‘உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்’ என்று கப்டன் ரனீஷ் என புகழராம் சூட்டி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கெப்டன் ரனிஷின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட வீதியின் இருபுறமும் வாகனங்களில் சென்ற உக்ரைனியர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி தலைகுனிந்து மரியாதை செலுத்தினர்.