சாகரவுக்கு எதிராக போராட்டம்: புண்ணாக்கு வாளியுடன் வருகைதந்த மக்கள் போராட்ட இயக்கம்

0
136

மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காத நிலையில் வீதியிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் புண்ணாக்கு வாளியொன்றை கொண்டு வந்துட்டுள்ளதுடன், அதனை வீதியில் வைத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.