பத்து வருடங்களுக்கு பின் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மட்டக்களப்பு பாடசாலை..

0
140

மட்டக்களப்பு காவத்தமுனை அல் அமீன் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அந்த வகையில் MIM.FARAH (157), MHZ.HAANI(156), KF.AMNA (155), MF.AATHIFA (150), TM.IMAS (149), MZF.ZAINAB (145) ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சிறந்த பெறுபேறு

மேலும் MRM.AKEEF (144),  MR.MUAATH (143),  A.ALTHAF (143 ), KF.INSIRAH (141) ஆகிய 4 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

அதே போல் 37 மாணவர்கள் 70 க்கு மேல் சித்தி புள்ளியினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலையானது கடந்த 10 வருடங்களுக்கு பின்னர் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.