சாமிமலை – ஓல்டன் தோட்ட நிலாவத்தை பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

0
182

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை – ஓல்டன் தோட்ட நிலாவத்தை பகுதியில் மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பிரிவில் உள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அதே தோட்டத்தை சேர்ந்த கிட்னசாமி கிருஷ்ணசாமி 70 வயது உடைய நபர் காணாமல் போய் உள்ள நபர் உடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என கூறினார்கள். இது குறித்து அந்த தோட்ட நிர்வாகம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்து உள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்பகுதிக்கு பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் பார்வை இட்ட பின்னர் எழும்புகள் டி.என்.ஏ.பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டன் தடையவியல் பொலிஸார் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.