ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்

0
242

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியில் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் மத்திய குழுவிற்கு அறிவிக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கடைசியில் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், கட்சியின் செயலாளர் நாயகம் பதவியை தயாசிறி ஜயசேகர இழந்துள்ளார்.

இந்த நிலையில், பிரதிச் செயலாளர் நாயகம் சரத் ஏக்கநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.