மலையக கட்சிகளுடனான ரணில் சந்திப்பு ஒத்திவைப்பு!

0
175

மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் (11.08.2023) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடாத்த ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் எதிர்வரும் (12.08.2023) அன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம் 200 ‘நாம் இலங்கையர்’ எனும் தொனிப்பொருளில் பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

மலையக கட்சிகளுடனான ஜனாதிபதி சந்திப்பு ஒத்திவைப்பு! | President Meeting Upcountry Ministers Postponed

இதன் காரணமாக கூட்டணி உறுப்பினர்கள் எதிர்வரும் (11.08.2023) ஆம் திகதி கொழும்பில் இல்லாத காரணத்தாலும் (10.08.2023) ஆம் திகதி பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ள முழுநாள் விவாதம் காரணமாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், சந்திப்பை ஏற்படுத்தும் தினத்தை கலந்தாலோசித்து பின் தெரிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.