மதுபான சாலை அருகே மீட்கப்பட்ட சிசுவின் சடலம்; இலங்கையை பதறவைத்த சம்பவம்

0
188

நோர்வூட்டில் ஓடும் அருவியில் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே திங்கட்கிழமை (24) சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் பதறவைத்த சம்பவம்; மதுபான சாலை அருகே மீட்கப்பட்ட சிசுவின் சடலம் | Body Of Baby Found Near Madhubana Road

மேற்கொண்ட விசாரணை

அப் பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றி புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு வருகை தந்து கைரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் சிசு பொலித்தீன் உறையில் போடப்பட்ட நிலையில் ஓடையில் வீசப்பட்டு உள்ளது எனவும் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என கூறினார்.